Wednesday 29 August 2012

முதல் பந்தை சந்திக்க பயமா * மனம் திறக்கிறார் சேவக்


புதுடில்லி: கிரிக்கெட் போட்டிகளில் துணிச்சலாக "பேட்' செய்யும் சேவக்கிற்கு, முதல் பந்தை சந்திக்கும் போது பதட்டமாக இருக்குமாம்.
இந்திய அணியின்  துவக்க வீரர் சேவக். அதிரடி ஆட்டத்தில் கில்லாடியான இவர், பவுண்டரி, சிக்சர்களாக பறக்க விடுவது வழக்கம். இவருக்கும் களத்தில் இருக்கும் போது பதட்டம் ஏற்படுவதுண்டு.
இதுகுறித்து சேவக் கூறியது: ஒவ்வொரு போட்டியிலும் முதல் பந்தை சந்திக்கும் போது மனதில் லேசான நடுக்கம் இருக்கும். அப்போது எனது வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்புது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால் இதனை ஒருபோதும் வெளிப்படுத்தியது கிடையாது. ஏனெனில் அது எதிரணி பவுலர்களுக்கு சாதகமாக மாறிவிடும். இதனால் பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்து, எனது விக்கெட்டை விரைவில் கைப்பற்றிவிடுவார்கள்.  ஒவ்வொரு முறையும் பந்தை எதிர்கொள்ளும் போது, தன்னம்பிக்கையுடன் விளையாடுவதால், ஆரம்பம் முதல் அடித்து ஆட முடிகிறது.
மனவலிமையும், தன்னம்பிக்கையும் இருந்தால், எந்த ஒரு பவுலரின் பந்தையும் சமாளித்து விடலாம். பொதுவாக சர்வதேச போட்டிகளில் மனவலிமை முக்கியமான ஒன்று. பேட்ஸ்மேனாக
இருந்தாலும் சரி, பவுலராக இருந்தாலும் சரி மனம் தளராமல் போராடினால் இலக்கை அடைந்துவிடலாம்.
சச்சினுடன் இணைந்து விளையாடும் போது "ரிலாக்சாக' இருக்கலாம். ஏனெனில் எதிரணியினர் சச்சின் விக்கெட்டை கைப்பற்றுவதை இலக்காக கொண்டுள்ளனர். ஆனால் காம்பிருடன் விளையாடும் போது, அதிக நெருக்கடி ஏற்படும்.ஏனெனில் கவனம் என் மீது தான் அதிகம் இருக்கும். இதுபோன்ற நேரத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் விளையாடுவேன்.
போட்டியில் "டக்-அவுட்' ஆனாலும் சரி, 300 ரன்களுக்கு மேல் எடுத்தாலும் சரி மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் களமிறங்குவேன்.  சில நேரங்களில் விக்கெட்டை விரைவில் இழந்து திரும்ப நேரிடும். இதுபோன்ற சமயங்களில் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் அடுத்த போட்டியில் சாதிக்க முடியும். இவ்வாறு சேவக் கூறினார்.
இந்திய அணியில் அடித்து ஆடக்கூடிய திறமையான வீரர்கள் நிறைய வந்துவிட்டனர். விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனி, யுவராஜ் சிங், ரோகித் சர்மா ஆகியோர் விரைவில் பந்தை சிக்சருக்கு அனுப்பும் திறமை பெற்றுள்ளனர். இதேபோல டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா), கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து) <உள்ளிட்ட மற்ற அணி வீரர்களும் அடித்து ஆடுவதில் திறமையானவர்கள்.
இவ்வாறு சேவக் கூறினார்.

*News From http://www.dinamalar.com(29-Aug-2012)
http://www.makkalsanthai.com/


வெற்றியைக் கொண்டாடிய இந்திய அணி வீரர்கள்



உலகக் கோப்பையை வென்ற இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் வெற்றி பெருமிதத்துடன் நேற்று இந்தியா திரும்பினர். அவர்களுக்கு மும்பை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மூன்றாவது முறை உலக சாம்பியன்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், அந்நாட்டு அணியை எதிர்கொண்டு வெற்றிபெற்றது. இதன் மூலம் மூன்றாவது முறையாக ஜூனியர் உலகக் கோப்பையை கைப்பற்றி, ஆஸ்திரேலியாவின் சாதனையை இந்திய அணி சமன் செய்துள்ளது.
வெற்றிக் கொண்டாட்டம்

வெற்றியை கொண்டாடும் விதமாக வீரர்களது உறவினர்களும், நண்பர்களும் அவர்களுக்கு மாலை அணிவித்து, மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். உன்முக்த் சந்த் தலைமையிலான வீரர்கள், மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கேக் வெட்டி, தங்களது வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

* News From http://puthiyathalaimurai.tv(29-Aug-2012)
http://www.makkalsanthai.com/


Thursday 9 August 2012

டில்லியில் "வெள்ளி' நாயகன்! * ராணுவத்தினர் உற்சாக வரவேற்பு


புதுடில்லி: ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று, தாயகம் திரும்பிய இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் விஜய் குமாருக்கு ராணுவத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  இந்திய ராணுவத்தில் சுபேதாரராக பணியாற்றுகிறார் விஜய குமார். இவர் லண்டன் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் 25 மீ., "ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார் .நேற்று இவர் தாயகம் திரும்பினார். டில்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய இவருக்கு, ராணுவத்தினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் ராணுவ தலைமையகத்திற்கு திறந்த ஜீப்பில் அழைத்துச் செல்லப்பட்டார்.
அப்போது விஜய் குமார் அளித்த பேட்டி:
 தாயகம் திரும்பிய எனக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 2006, 2010 காமன்வெல்த் போட்டி மற்றும் லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளேன். எனக்குரிய அங்கீகாரம், பதவி உயர்வு போன்றவற்றை எதிர்பார்க்கிறேன்.
பதக்கம் வென்றவுடன் பல இடங்களில் இருந்து சலுகைகள் வருகின்றன. ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தில் பதவி வழங்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சரே அறிவித்தார். ஆனால் என் எதிர்பார்ப்பு எல்லாம் ராணுவத்தின் சார்பில் உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதுதான். தற்போது சிறிய அளவில் ஓய்வு தேவைப்படுகிறது. பின், 2016ல் நடக்க உள்ள ஒலிம்பிக்கில் சாதிக்க பயிற்சியில் ஈடுபடுவேன்.
இவ்வாறு விஜய் குமார் கூறினார்.
விஜய் குமாரின் தந்தையும், முன்னாள் ராணுவ சுபேதாரருமான பன்கு ராம் கூறுகையில்,"" கடின உழைப்பினால் இந்த பதக்கத்தை வென்றுள்ளார். இதற்காக வீட்டின் தொலைதூரத்தில் அவர் பயிற்சி மேற்கொண்டார். ராணுவத்தில் பதவி உயர்வு வேண்டுமென்று கேட்டது, அவரின் முடிவு. இதைப்பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இவரின் ராணுவ பணியால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்,''என்றார்.
தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கத்தின் ஆலோசகர் பல்ஜித் கூறுகையில்"" விஜய் குமார் மிகவும் அமைதியானவர். இவர் உறுதியாக பதக்கம் வெல்வார் என எதிர்பார்த்தேன். எங்களால் என்ன சலுகைகள் தர முடியமோ அதை உறுதியாக இவருக்கு தருவோம். இவரை பிரதமரிடம் அழைத்துச் செல்வோம். பாராட்டு விழா நடத்தவும் முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.விஜய் பாக்ஸ்...
ரூ. 20 லட்சம் பரிசு
ஒலிம்பிக்கில் வெள்ளி மற்றம் வெண்கலம் வென்ற வீரர்களுக்கு தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கம் பரிசு அறிவித்துள்ளது.
இது குறித்து தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கம் வெளியிட்ட அறிக்கை: துப்பாக்கி சுடுதல் 25மீ., ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற விஜய் குமாருக்கு ரூ. 20 லட்சமும், 10மீ., ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்ற ககன் நரங்கிற்கு ரூ 15 லட்சமும் வழங்கப்படும். இதற்கான பாராட்டு விழாவை விரைவில் நடத்தவுள்ளோம். இதில் இப்பரிசுக்கான காசோலை அவர்களுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More