Wednesday 29 August 2012

வெற்றியைக் கொண்டாடிய இந்திய அணி வீரர்கள்



உலகக் கோப்பையை வென்ற இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் வெற்றி பெருமிதத்துடன் நேற்று இந்தியா திரும்பினர். அவர்களுக்கு மும்பை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மூன்றாவது முறை உலக சாம்பியன்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், அந்நாட்டு அணியை எதிர்கொண்டு வெற்றிபெற்றது. இதன் மூலம் மூன்றாவது முறையாக ஜூனியர் உலகக் கோப்பையை கைப்பற்றி, ஆஸ்திரேலியாவின் சாதனையை இந்திய அணி சமன் செய்துள்ளது.
வெற்றிக் கொண்டாட்டம்

வெற்றியை கொண்டாடும் விதமாக வீரர்களது உறவினர்களும், நண்பர்களும் அவர்களுக்கு மாலை அணிவித்து, மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். உன்முக்த் சந்த் தலைமையிலான வீரர்கள், மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கேக் வெட்டி, தங்களது வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

* News From http://puthiyathalaimurai.tv(29-Aug-2012)
http://www.makkalsanthai.com/


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More