Thursday 6 September 2012

யு.எஸ்., ஓபன்:அரையிறுதியில் அசரன்கா


நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு உலகின் "நம்பர்-1' வீராங்கனையான விக்டோரியா அசரன்கா முதல் முறையாக முன்னேறினார்.

 நியூயார்க்கில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதியில் பெலாரசின் அசரன்கா, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசரை சந்தித்தார். இதன் முதல் செட்டை 6-1 என அசரன்கா சுலபமாக கைப்பற்றினார். பின் இரண்டாவது செட்டில் எழுச்சி கண்ட ஸ்டோசர் 6-4 என வென்றார்.
வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் அசரன்கா 7-6 என வென்றார். முடிவில் அசரன்கா 6-1, 4-6, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, யு.எஸ்., ஓபன் அரையிறுதிக்கு முதல் முறையாக தகுதி பெற்றார்.

பெரர் முன்னேற்றம்:
ஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் <உலகின் "நம்பர்-4' வீரரான ஸ்பெயினின் டேவிட் பெரர், பிரான்சின் ரிச்சர்ட் கேஸ்குயிட்டை சந்தித்தார். முதல் இரண்டு செட்களையும் பெரர் 7-5, 7-6 என கைப்பற்றினார். மூன்றாவது செட்டை 6-4 என வசப்படுத்தினார். இறுதியில் பெரர் 7-5, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று, காலிறுதிக்குள் நுழைந்தார். இப்போட்டி மழை குறுக்கிட்டதால் சுமார் 7 மணி நேரம் நீடித்தது. பிற போட்டிகள் மழை காரணமாக தடைபட்டது.



www.dinamalar.com (6 September 2012 )
http://www.makkalsanthai.com/

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More