Thursday 6 September 2012

விசாகப்பட்டனத்தில் இந்திய கிரிக்கெட்அணி


விசாகப்பட்டனம்: "டுவென்டி-20' போட்டியில் மோதவுள்ள இந்தியா, நியூசிலாந்து அணியினர் விசாகப்பட்டனம் வந்து சேர்ந்தனர்.


இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, 0-2 என இழந்தது. அடுத்து இரு அணிகள் மோதும் இரண்டு "டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. முதல் போட்டி வரும் 8ம் தேதி, விசாகப்பட்டனத்தில் நடக்கவுள்ளது.

இதில் பங்கேற்க இரு அணியினரும், பெங்களூருவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் விசாகப்பட்டனம் வந்து சேர்ந்தனர். மொத்தம் 27 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட, ராஜசேகர ரெட்டி மைதானத்தில், 17 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனைக்கு உள்ளது. கேன்சருக்குப் பின் யுவராஜ் சிங் மீண்டும் களத்தில் இறங்கியுள்ளதால், விற்பனை துவங்கிய ஒரு மணி நேரத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

இன்றும், நாளையும், காலை 10.00 முதல் 1.00 மணி வரை, அடுத்து 2.00 முதல் 5.00 மணி வரை, இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

www.dinamalar.com (6 September 2012 )
http://www.makkalsanthai.com/


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More