புதுடில்லி: "பிபா' கால்பந்து ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில் இந்திய அணி 169வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
கால்பந்து போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் பட்டியலை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) நேற்று வெளியிட்டது. சமீபத்தில் முடிந்த நேரு கோப்பை கால்பந்து பைனலில் கேமரூன் அணியை வீழ்த்தி, தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி 105 புள்ளிகளுடன் 168வது இடத்தில் இருந்து 169வது இடத்துக்கு தள்ளப்பட்டது. வங்கதேசம் (170வது இடம்), பாகிஸ்தான் (177வது) உள்ளிட்ட ஆசிய அணிகள் தலா ஒரு இடம் பின்தங்கின. இலங்கை அணி 179வது இடத்தில் நீடிக்கிறது.
முதல் மூன்று இடங்களை முறையே ஸ்பெயின் (1617 புள்ளி), ஜெர்மனி (1437), இங்கிலாந்து (1274) அணிகள் தக்கவைத்துக் கொண்டன. போர்ச்சுகல் அணி (1232) ஒரு இடம் முன்னேறி நான்காவது இடம் பிடித்தது. உருகுவே (1217) ஒரு இடம் பின்தள்ளப்பட்டது. அடுத்த ஐந்து இடங்களில் முறையே இத்தாலி (1174), அர்ஜென்டினா (1121), நெதர்லாந்து (1044), குரோஷியா (1020), டென்மார்க் (1006) அணிகள் தொடர்கின்றன.
ஆசிய அணிகளுக்கான ரேங்கிங்கில் இந்தியாவுக்கு 32வது இடம் கிடைத்துள்ளது. வங்கதேசம் (33), பாகிஸ்தான் (35), இலங்கை (36) பின்தங்கி உள்ளன. முதல் மூன்று இடங்களில் ஜப்பான் (793), ஆஸ்திரேலியா (778), தென் கொரியா (763) அணிகள் உள்ளன.
www.dinamalar.com (6 September 2012 )
http://www.makkalsanthai.com/
0 comments:
Post a Comment